Home இலங்கை கல்வி பரீட்சை முறைமை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பரீட்சை முறைமை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும் என பிரதமர், ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர பிரதமரிடம் முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

சாதாரண முறைப்படி பரீட்சை

அதன்படி 2026 ஆம் ஆண்டில் இருந்து, முன்பு இடம்பெற்றது போன்று சாதாரண முறைப்படி பரீட்சைகளை நடாத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், கோவிட் தொற்று ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெற்றவாறு பரீட்சைகள் உரிய கால அட்டவணையில் நடத்தப்பட முடியும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Source: https://tamilwin.com/article/examination-system-announce-ministry-of-education-1736377868

NO COMMENTS

Exit mobile version