Home இலங்கை சமூகம் யாழில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்

யாழில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்

0

யாழ் (Jaffna) ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றிலுள்ள கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலமானது ஊர்காவற்துறை (Kayts)  காவல்துறை பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் நேற்று (15) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தெரியவருகையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஆண் ஒருவர் எனவும் மேலும் சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதால் உயிரிழந்தவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளள்

இந்த நிலையில், குறித்த சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா (Jaffna Teaching Hospital) வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version