Home இலங்கை கல்வி உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள்

எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அனுமதி அட்டைகள்

நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பாடசாலை அதிபர்கள் தத்தமது வலையக் கல்வி அலுவலகங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றைச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் தங்களது பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அனுமதி அட்டைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது திருத்தங்கள் காணப்படின், அவற்றை இணையவழியில் திருத்துவதற்கான வசதிகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

Source: https://tamilwin.com/article/examinations-department-important-announcement-1785566309

NO COMMENTS

Exit mobile version