2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை கலால் திணைக்களம் 120.5 பில்லியன் வருவாயைப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 102.6% ஐ அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கலால் திணைக்கள வட்டாரங்களின்படி, இந்த எண்ணிக்கை இந்தக் காலகட்டத்திற்கான வருவாய் இலக்கை விட அதிகமாக உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலால் திணைக்களம்
இது வருவாய் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
2023 ஆம் ஆண்டில்,கலால் திணைக்கள அரசாங்கத்திற்கு 226.7 பில்லியனை பங்களித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருவாய் இலக்கு 2022 இல் 178.6 பில்லியனாகவும், 2021 இல் 170.3 பில்லியனாகவும் இலக்கை பதிவு செய்துள்ளமை குறிப்பட்த்தக்கது.
