Home இலங்கை குற்றம் நுவரெலியாவில் முகப்புத்தக களியாட்டம் : போதைப்பொருளுடன் 30 பேர் கைது

நுவரெலியாவில் முகப்புத்தக களியாட்டம் : போதைப்பொருளுடன் 30 பேர் கைது

0

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள
ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று
சுற்றிவளைப்பப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

குறித்த பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் முகப்புத்தக
(பேஸ்புக்) களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற
இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது கேரளா கஞ்சா 6 கிராம் 90 மில்லி கிராம், 12 போதைப்பொருள் மாத்திரைகள், குஷ் போதைப்பொருள் 1380 மில்லி கிராம்,
ஐஸ் போதைப்பொருள் 400 மில்லி கிராம், கொக்கைன் போதைப்பொருள் 150 மில்லி
கிராம் உட்பட பல்வேறு வகைப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 38 வயதுடையவர்கள் எனவும் அவர்கள்
அனைவரும் வெளிப்பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (20) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் நுவரெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version