Home இலங்கை குற்றம் வீடொன்றில் நள்ளிரவில் யுவதியால் நடத்தப்பட்ட விருந்து – மயக்க நிலையில் சிக்கிய பலர்

வீடொன்றில் நள்ளிரவில் யுவதியால் நடத்தப்பட்ட விருந்து – மயக்க நிலையில் சிக்கிய பலர்

0

கம்பஹா, ராகம பகுதியில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட குழு நடத்திய பேஸ்புக் போதைப்பொருள் விருந்து பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது இளம் பெண் உட்பட 13 பேர் ஐஸ் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவனை காரணமாக மிகவும் மயக்கமான மற்றும் சுயநினைவற்ற நிலையில் நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களியாட்ட விருந்து

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் இருந்த 20 வயதுடைய இளம் பெண்ணால் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இந்த விருந்து ராகம பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியில் வீடு ஒன்றில் நடந்ததாக பொலிஸார் குறிப்பிடட்டுள்ளனர்.

விசாரணையின் போது அந்த இளம் பெண் ராகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஏனைய சந்தேக நபர்கள் ஜா-எல, கம்பஹா, கிரிபத்கொட, களனி மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version