Home இலங்கை சமூகம் வலி. வடக்கில் நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

வலி. வடக்கில் நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

0

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் (24) நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

நான்காவது நாளான இன்றைய தினம் காணிக்கான தமது உறுதிகளை எடுத்து வந்து அதனை காண்பித்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

போராட்டம்

காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்கள் அப்பகுதியிலையே உணவு சமைத்து, அருந்தி அவ்விடத்தை விட்டு நகராமல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, அன்ரனிபுரம், காங்கேசன்துறை
உள்ளிட்டவர்களும் கத்தோலிக்க மத குருமார்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு
இயக்கம் மற்றும் பொது அமைப்புகள் உட்பட மலையக மக்கள் சார் பொது அமைப்புக்களைச்
சேர்ந்த சிலரும் காணி விடுவிப்பைக் கோரி கவனயீர்ப்பை முன்னெடுத்தனர். 

NO COMMENTS

Exit mobile version