நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் காற்றின் தாக்கத்தின்
காரணமாக நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் பழமைவாய்ந்த மரம் ஒன்றின் கிளை திடீரென முறிந்து விழுந்துள்ளது.
குறித்த சம்பவமானது நானுஓயா டெஸ்போட் பகுதியில்
இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.
வீதியில் ஒரு பகுதியில் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் அக்கிளை
முறிந்து விழுந்துள்ளது.
தேவையான நடவடிக்கை
இதனால் குறித்த வீதியை பயன்படுத்தி வருவோர் வீதியில்
கிடக்கும் இந்த கிளையினால் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
எனினும் உடனடியாக மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை
மேற்கொண்டு போக்குவரத்து சீர் செய்வதற்கு பணிகள் நடைபெறுவதாக நானுஓயா
பொலிஸார் தெரிவித்தனர்.
