Home இலங்கை சமூகம் வவுனியாவில் கோரம்: குடும்பஸ்தரின் உயிரைப்பறித்த வாள்வெட்டு சம்பவம்

வவுனியாவில் கோரம்: குடும்பஸ்தரின் உயிரைப்பறித்த வாள்வெட்டு சம்பவம்

0

வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில்
குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(01.12.2024) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும்
தெரியவருகையில்,  குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக் கொண்டு வந்த குடும்பஸ்தர்
மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது.

வவுனியா வைத்தியசாலை

இதனால் படுகாயமடைந்த அவர்
அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் ஏற்கனவே சாவடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் வயது 46 என்ற இரண்டு
பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இதன்படி சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version