Home இலங்கை சமூகம் யாழில் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் உயிரிழப்பு!

யாழில் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் உயிரிழப்பு!

0

யாழில் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம்
உயிரிழந்துள்ளார்.

இதன்போது 2ஆம் குறுக்கு தெரு, கொழும்புத்துறை பகுதியை
சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் (26) காலை காய்ச்சல் ஏற்பட்டது.

வைத்தியசாலையில் சிகிச்சை 

இந்நிலையில்
நேற்றையதினம் மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை
உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version