Home இலங்கை சமூகம் யாழில் வெங்காய உற்பத்தியில் நட்டத்தை எதிர்நோக்கும் விவசாயிகள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழில் வெங்காய உற்பத்தியில் நட்டத்தை எதிர்நோக்கும் விவசாயிகள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

யாழில் (jaffna) சீரற்ற வானிலை மற்றும் நோய் தாக்கத்தினால் வெங்காய உற்பத்தியில் உரிய விளைச்சலை பெற முடியாது போயுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனடிப்படையில், முதலீட்டை பெற முடியாத தமக்கு உரிய நிவாரணத்தை பெற்று தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் மேலும் கருத்து தெரிவிக்கையில் “தங்களுக்கு அரசாங்கம் மாணியம் மற்றும் நிவாரணம் உட்பட எதனையும் வழங்குவது இல்லை.

வெங்காய செய்கை

தொடரும் இந்த சூழலினால் இனி வரும் காலங்களில் வெங்காய செய்கையை நாங்கள் கைவிட வேண்டிய சூழல்தான் ஏற்படும்.

வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 200 தொடக்கம் 250 ரூபா வரை விற்றால் மட்டுமே விவசாயிகளால் இலாபம் காண ஏழும்.

இருப்பினும், சந்தையில் வெங்காயம் கிலோவுக்கு 100 தொடக்கம் 150 ரூபா மாத்திரமே விற்கப்படுகின்றது இதனால் பெருமளவு நட்டத்தை விவசாயிகள் எதிர் நோக்குகின்றனர்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.     

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4

Source: https://ibctamil.com/article/farmers-engaged-in-onion-production-1725662405

NO COMMENTS

Exit mobile version