Home இலங்கை அரசியல் நாமலுக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு

நாமலுக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு

0

70 மில்லியன் ரூபா நிதியை நம்பிக்கை மோசடி செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாக கூறி, இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து நிதியை பெற்று மோசடி செய்ததாக சட்ட மா அதிபரால் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக பிரதிவாதியான நாமல் ராஜபக்ச இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றம்

இதன்போது குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version