Home இலங்கை சமூகம் கொழும்பு துறைமுகத்தில் இரவுவேளை ஏற்பட்ட பாரிய தீ : கொள்கலன் எரிந்து நாசம்

கொழும்பு துறைமுகத்தில் இரவுவேளை ஏற்பட்ட பாரிய தீ : கொள்கலன் எரிந்து நாசம்

0

கொழும்பு துறைமுகத்தில்(port of colombo) உள்ள பண்டாரநாயக்க கப்பல்துறை எனப்படும் சேமிப்பு வளாகத்திற்கு அருகில் உள்ள ஒரு கொள்கலனில் நேற்று (30) இரவு தீ விபத்து ஏற்பட்டதாகவும், கொள்கலனில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியதாகவும் துறைமுக அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க கப்பல்துறை கிடங்கில் ஒரு கொள்கலனில் இருந்து பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தபோது, ​​இரவு 7.30 மணியளவில் கொள்கலனில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மிகக் குறுகிய காலத்தில் தீ அப்பகுதி முழுவதும் பரவியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

தீயை கட்டுப்படுத்திய துறைமுக தீயணைப்பு துறை

இரவு 10:00 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்படவில்லை என்றும், துறைமுக தீயணைப்புத் துறையினரால் தீயைக் கட்டுப்படுத்த முடிந்தது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும், கொள்கலனில் அபாயகரமான பொருட்கள் இருப்பது குறித்து அறிவிக்கப்படவில்லை என்றும், தீ விபத்து மற்றும் ஏற்பட்ட சேதம் குறித்து துறைமுக ஆணையம் சிறப்பு விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.    

NO COMMENTS

Exit mobile version