Home இலங்கை குற்றம் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபரை சுட்டு கொலை செய்த கொடூரம்!

தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபரை சுட்டு கொலை செய்த கொடூரம்!

0

மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள துரியன் (முள்நாறி) தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் பின்னணி

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீரிகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பாக மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version