Home இலங்கை சமூகம் யாழ்.கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கடற்றொழிலாளர் உயிரிழப்பு

யாழ்.கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கடற்றொழிலாளர் உயிரிழப்பு

0

யாழ்.வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற் பகுதியில் இடம் பெற்ற
படகு விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(29) இடம்பெற்றுள்ளது.

உயிரிழப்பு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடற்றொழிலாளர்  இன்று அதிகாலை நாகர்கோவில் கடற் பகுதியில் படகுகளை கழுவிக்
கொண்டிருந்த வேளை அலையின் சீற்றத்தில் சிக்குண்ட படகு அவர் மேல் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.

இந்ததநிலையில், பலத்த காயமடைந்த கடற்றொழிலாளர் பருத்தித்துறை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version