யாழில் (Jaffna) வாள் வெட்டிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பை (Batticaloa) சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.
கைகலப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வாடியில் நேற்று (22) இரவு இரு கடற்றொழிலாளர்களுக்கு இடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
கைகலப்பு முற்றியதில் இருவருக்கும் இடையில் வாள்வெட்டு தாக்குதல்
இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவரும் மந்திகை ஆதாரவைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
