Home இலங்கை சமூகம் இராமேஸ்வரத்தில் படகு மூழ்கியதில் மாயமான கடற்றொழிலாளி சடலமாக மீட்பு

இராமேஸ்வரத்தில் படகு மூழ்கியதில் மாயமான கடற்றொழிலாளி சடலமாக மீட்பு

0

இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த 26 ஆம் திகதி
டெல்வின்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற, டெல்வின்
ராஜ், வெள்ளைச்சாமி, சுரேஷ், எமரிட் ஆகிய நான்கு கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்குச்
சென்று மறுநாள் செவ்வாய்க்கிழமை மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது
சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது.

இதன்போது மூழ்கிய படகில் இருந்து டெல்வின் ராஜ், சுரேஷ் ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்கள்
நீந்தி இலங்கை கடற்படையினரின் உதவியால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை
தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு விமானம் மூலம் இந்தியா திரும்பி உள்ளதாக
அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் வழக்குப்பதிவு

இந்நிலையில் மாயமான கடற்றொழிலாளர்கள் எமரிட் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரை இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு சக கடற்றொழிலாளர்கள் இரண்டு
நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று புதன் (29) மாலை நடுக்கடலில் மாயமான
கடற்றொழிலாளர் எமரிட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடலை கைப்பற்றிய கடற்றொழிலாளர்கள் இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு உடலை கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக இராமேஸ்வரம் அரசு
மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து மரைன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

மேலும் நடுக்கடலில் மாயமான வெள்ளைச்சாமி என்பவரை இந்திய அரசு தேடித் தரும்படி
கோரிக்கை விடுத்துள்ள உறவினர்கள் இறந்த கடற்றொழிலாளியின் எமரிட் குடும்பத்திற்கு அரசு
நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version