வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் கடற்றொழிலாளர் ஒருவரின் வெளி இணைப்பு
இயந்திரம் தவறி கடலில் விழுந்து காணாமல் போயுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(18.03.2025) இடம்பெற்றுள்ளது.
கடற்றொழில் நடவடிக்கைக்காக இன்று மாலை கடலில் பயணித்த வேலை சீரற்ற கடல் அலைகளால்
படகில் இருந்த 40 குதிரை வலுவுடைய வெளி இணைப்பு இயந்திரம் தவறி கடலில்
விழுந்துள்ளது.
தேடும் பணி
தவறி விழுந்து காணாமல் போன வெளி இணைப்பு இயந்திரத்தை தேடும் பணியில்
கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
