Home இலங்கை சமூகம் கடலிற்கு சென்ற நிலையில் கரை திரும்பாத இரு பிள்ளைகளின் தந்தை

கடலிற்கு சென்ற நிலையில் கரை திரும்பாத இரு பிள்ளைகளின் தந்தை

0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் கட்டுமரத்தில்
கடற்றொழிலுக்கு சென்ற நபர் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்
தந்தையே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது.

ஆளின்றி மிதந்து வந்த கட்டுமரம்

குறித்த நபர் கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச்
சென்றவேளை ஆளின்றி கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மணல்காடு கடற்தொழிலாளர்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version