Home இலங்கை சமூகம் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

0

ஹிக்கடுவ ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில்
நான்கு பேர் மீட்கப்பட்டதாகவும், ஒரு மாணவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எசல போயா தினத்தன்று விபத்தில் சிக்கிய ஐந்து மாணவர்களும் வீடுகளை விட்டு வெளியேறி ஹிக்கடுவ ஆற்றில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர்.

நீரில் மூழ்கிய மாணவர்கள்

அங்கு, ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.இதனையடுத்து உள்ளூர்வாசிகளால் அவர்களில் நான்கு பேரைக் காப்பாற்ற முடிந்தது.

16 வயதுடைய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறை உயிர்காக்கும் படையினரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டனர்.

மாணவனின் சடலம்

ஹிக்கடுவ தொடருந்து பாலத்திற்கு அருகில் இன்று(21) காலை மாணவனின் சடலம் மிதந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மாணவன் எல்பிட்டிய இகல்கந்த புதிய வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்தவர்.  

Source: https://ibctamil.com/article/five-students-drown-one-student-dies-1721544930

NO COMMENTS

Exit mobile version