Home இலங்கை சமூகம் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

0

கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்து இன்று கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போ​ஹோரன் வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.

மேலதிக விசாரணை

கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும், தம்புள்ளையிலிருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் ஏற்பட்டவிபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version