Home இலங்கை குற்றம் வீடொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் : 5 பெண்கள் கைது

வீடொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் : 5 பெண்கள் கைது

0

ஹபரணை நகருக்கு அண்மித்த பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத தொழில்முறையில் ஈடுபட்ட 5 பெண்களை பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

ஹபரணை பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனையின் போது, ​​தகாத நடவடிக்கைக்கு ஈடுபட்டிருந்த வீட்டில் தங்கியிருந்த 05 பெண்கள் மற்றும் பல கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீடு சுற்றிவளைப்பு

நேற்று காலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32-42 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த விடுதியில் சோதனை நடத்தப்பட்ட போது அங்கு சேவை பெற வந்த 32 மற்றும் 42 வயதுடைய 2 ஆண்களை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30-45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் எனவும், அவர்கள் ஹபரணை, வவுனியா, குருநாகல், கெக்கிராவ மற்றும் கல்நேவ பிரதேசங்களை வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று ஹிகுராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version