மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாழை
குளம் பறவைகள் சரணாலயத்திற்கு இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மீண்டும்
தற்போது வந்துள்ளதை அவதானிக்க முடிமுடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தை அண்மித்த ஈரநிலப் பகுதிகளில் Australian
White Ibis என்ற புலம்பெயர் பறவைகளே தற்போது வந்துள்ளதைக் காணமுடிகின்றது.
மட்டக்களப்பிற்கு மெருகூட்டும் பறவைகள்
இந்தப்பறவைகளின் வருகை அப்பகுதிக்கு மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை வனப்பிற்கு
மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.
இப்பறவை இனம் வருடாந்தம் மார்கழி, தை, மாதங்களில்
இப்பிரதேசத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருகை தருவதாகவும் பின்னர் ஏப்ரல்
மாதத்தில் மீண்டும் குஞ்சுகளுடன் அவுஸ்ரேலியா நாட்டிற்குத் திரும்பிச்
செல்வதாகவும், சூழலியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இக்காலப்பகுதியில் இவ்வாறு பிரமிக்கதக்க பறவைகளின் அழகை உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டவர்கள் அப்பகுதிக்கு வருகைதந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
கழிவுகளை வீசும் சிலரின் பொறுப்பற்ற செயற்பாடு
இந்நிலையில் அப்பறவைகள் அமைந்துள்ள சரணாலயப் பகுதியில்
சிலர் பொறுப்பற்ற வித்தில் தொடர்சியாக கழிவுகளையம் வீசி வருகின்றனர்.
இவ்வாறு
வீசப்படும் கழிவுகளை இப்பறவைகள் உண்பதால் இறந்து அழியும் அபாயகரமான சூழல்
காணப்படுகிறது.
அதுபோல் இப்பறவைகளை சிலர் இறைச்சிக்காக வேட்டையாடி வருவதாகவும், அப்பகுதி
மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
