நேபாளத்தில் செவ்வந்தி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் தாம் எதையோ சாதித்தது போன்ற பிரம்மையை உருவாக்குகின்றனர் என கனடாவின் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்தக் கைது விவகாரத்தில் இன்டர்போல் பேசு பொருளாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், செவ்வந்தி சார்பாக இன்டர்போலிற்கு சிவப்பு எச்சரிக்கையை பகிர்ந்து கொண்டதாகவும் இலங்கை ஒத்துக்கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நேபாளம்- காத்மண்டுவில் இன்டர்போலின் மத்திய நிலையம் ஒன்று உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,
