Home இலங்கை சமூகம் தொடருந்தில் பயணித்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்

தொடருந்தில் பயணித்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்

0

நானுஓயாவில்(Nanuoya) இருந்து பதுளை(Badulla) நோக்கி சென்றுக் கொண்டிருந்த தொடருந்தில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(09.03.2025) காலை இதல்கஸ்ஹின்ன சுரங்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.

35 வயது சீனப் பெண் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்து ஹப்புத்தளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த வெளிநாட்டு பெண்

குறித்த பெண் தொடருந்தில் இருந்து தலையை வெளியே விட்டு, தொங்கிக்கொண்டு பயணித்துள்ளதுடன் அங்கு 19ஆவது தொடருந்து சுரங்கத்தில் தலை மோதியதால் தொடருந்தில் இருந்து விழுந்துள்ளார்.

இந்நிலையில், அவரின் தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன் தொடருந்தில் கொண்டு செல்லப்பட்டு 1990 நோயாளர்காவு வண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விபத்தில் காயமடைந்த வெளிநாட்டு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version