Home இலங்கை சமூகம் திருகோணமலையில் ஆர்வத்துடன் பரதம் பயின்ற வெளிநாட்டு பெண்

திருகோணமலையில் ஆர்வத்துடன் பரதம் பயின்ற வெளிநாட்டு பெண்

0

போலந்து (Poland) நாட்டைச் சேர்ந்த பெண்மணியொருவர் திருகோணமலையில் (Trincomalee) பரதம் பயின்றுள்ளார்.

இந்தநிலையில், ஆனந்த பிரகதீஸ்வரா
கலாலயாவில் பரதக்கலையின் சில படிநிலைகளை அவர் பயின்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த தோமஸ்
ஜொயன்னா தம்பதியினர் நடன ஆசிரியர் மேனகா பாக்கியராஜாவின்
வழிநடத்தலில் அவருடைய மாணவிகளுடன் இணைந்து நடனக்கலையை பயின்றுள்ளனர்.

கலாச்சார பண்பாடு

தமிழர்களின் கலை மற்றும் கலாச்சார பண்பாடுகளில் தாங்கள் மிகுந்த ஆர்வம்
கொண்டுள்ளதாகவும் தங்களைப் போன்று பலரும் பரதக்கலையை பயில மிகுந்த ஆர்வத்துடன்
இருப்பதாகவும் குறித்த வெளிநாட்டு தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இலங்கை மக்களுடைய குறிப்பாக
தமிழர்களுடைய வாழ்வியலில் ஆர்வம் காட்டி வருவதாகவும் பெண்கள் தங்களுக்கான
மணமகன்களைக்கூட இலங்கையில் தேடுவதாகவும் சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டிகள்
குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இதுபோன்ற கலைகளை சுற்றுலாத்துறையுடன் இணைப்பதன் மூலம்
சுற்றுலாத்துறையில் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version