Home இலங்கை சமூகம் யாழில் முன்னாள் பெண் போராளி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் முன்னாள் பெண் போராளி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

0

யாழில் (Jaffna) முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த
சிறீஸ்கந்தராசா தவரூபி (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண் தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.  

இந்தநிலையில் மன விரக்தியில்
இன்று (27) மதியம் உணவருந்திய பின்னர் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி
உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version