Home இலங்கை குற்றம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜிதவிடம் 5 மணிநேரம் வாக்குமூலம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜிதவிடம் 5 மணிநேரம் வாக்குமூலம்

0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச்
செல்லப்பட்டார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன
ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று காலை
இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீண்ட நேர விசாரணை 

இதன்போது ராஜித சேனாரத்னவிடம் இருந்து 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு
செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வாக்குமூலம் வழங்கிய பின்னர் ராஜித சேனாரத்ன இலஞ்சம், ஊழல் விசாரணை
ஆணைக்குழுவில் இருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும்
விசாரணைகள் தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்
ராஜித சேனாரத்ன கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி
காலை முன்னிலைபடுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version