Home இலங்கை சமூகம் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது

0

மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கிரியுல்ல காவல்நிலைய அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கிரியுல்ல காவல்நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிரியுல்ல காவல்துறை பிரிவின் லப்பலா பகுதியில் 305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொட்டதெனியவைச் சேர்ந்த 20 வயதுடையவர்களாவர்.

மேலதிக விசாரணை

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் நீர்கொழும்பு மற்றும் குளியாப்பிட்டி காவல் பிரிவுகளில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன்படி, சந்தேக நபர்களால் திருடப்பட்ட 04 மோட்டார் சைக்கிள்களையும், குற்றங்களைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கிரியுல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version