யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (22.11.2025) இடம்பெற்றுள்ளது.
மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது நடவடிக்கை
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி செனவிரட்ன தலைமையிலான பொலிஸ்
குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
