Home இலங்கை சமூகம் இரகசிய தகவலின் அடிப்படையில் யாழில் வசமாக சிக்கிய இளைஞர்கள்

இரகசிய தகவலின் அடிப்படையில் யாழில் வசமாக சிக்கிய இளைஞர்கள்

0

யாழ்ப்பாணத்தில் 42 போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் நேற்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நால்வர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட
சுற்றிவளைப்பின் போது 42 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் கைதாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ். குருநகரைச் சேர்ந்த 22
வயதுடைய இரு இளைஞர்களும், 24 வயதுடைய இரு இளைஞர்களுமே கைதாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version