Home இலங்கை பொருளாதாரம் எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்

0

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம். 

விலை திருத்தம்

மேலும், இதன்போது எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் அளவில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுதியில் பாரிய உயர்வு பதிவாகியிருந்த நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது.  

இந்தநிலையில், ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து வரும் நிலையில் இந்த மாதமும் எரிபொருளின் விலையில் மக்களுக்கு சாதகமான திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

எனினும், உலக சந்தையில் எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றங்களையும் கருத்திற் கொண்டு இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க இலங்கை தீர்மானம்

சந்திரிக்கா இழைத்த மிகப் பெரிய தவறு! மனம் வருந்தும் நிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version