Home இலங்கை சமூகம் புதிய அரசாங்கத்தில் இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா…!

புதிய அரசாங்கத்தில் இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா…!

0

புதிய அரசாங்கத்தின் கீழ் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

கடந்த அரசாங்கத்தின் போது மாதத்தின் கடைசி நாளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் எரிபொருள் விலை சூத்திரம் நீடிக்கப்படுமா, இல்லையா என்பது அநுர தலைமையிலான புதிய அரசாங்கம் எந்தவொரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

எரிபொருள் விலை சூத்திரம்

கடந்த மாத விலைச்சூத்திரத்தின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 332 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 377 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதிய விலை

10 ரூபாவால் குறைக்கப்பட்ட டீசலின் விலை தற்போது 307 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுப்பர் டீசல் லீற்றரின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் விற்பனை விலை 352 ரூபாவாகும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் தற்போது 352 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version