Home உலகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு

0

பிரான்சில் உணர்வடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இறுதிவணக்க நிகழ்வு நேற்று 20.06.2024‌ வியாழக்கிழமை மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், முதுநிலைப் போராளியுமாகிய விநாயகம் (கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி ) கடந்த (04.06.2024 ) செவ்வாய்க்கிழமை அன்று உடல் நலக்குறைவு காரணமாக பிரான்சில் காலமானார்.

நல்லடக்கம் 

இந்த நிலையில், நேற்று (20.06.2024) வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் பகல் 14.00 மணிவரை Espace Venise 30 Rte de Groslay 95200 Sarcelles என்னும் முகவரியில் இவரின் புகழுடல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து உறவினர்கள், பல கட்டமைப்புகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன் தமது இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

பின்னர் மாலை 15.00 மணிக்கு புகழுடலானது Cimetiére Parisien de Pantin 164 Av. Jean jaurés 93500 Pantin என்னும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version