Home உலகம் பிரபல தென்னிந்திய கலைஞர்களின் லண்டன் மேடையில் தலைவர் பிபாகரனின் பாடல்!

பிரபல தென்னிந்திய கலைஞர்களின் லண்டன் மேடையில் தலைவர் பிபாகரனின் பாடல்!

0

லண்டனில் (London) இடம்பெறவுள்ள தென்னிந்திய இசை கலைஞர் ஜீவி பிரகாஷின் (G. V. Prakash Kumar) பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) புகழை பாடும் பாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இசை நிகழ்ச்சி, (12/07/24) சனிக்கிழமை உலக புகழ் பெற்ற லண்டன் வெம்பிளி OVO அரீனாவில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் புகழ்பெற்ற பின்னனி பாடகர்களான, சைந்தவி, ஹரிசரன்,
சுவேதா மோகன், ஆனந்த், ஹரிபிரியா மற்றும் அந்தோனிதாசன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

இசை நிகழ்ச்சி

இந்தநிலையில், குறித்த நிகழ்வில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாடல் ஒன்று இடம்பெற இருகின்றது என்று தெரிய வருகின்றது.

இது நாள் வரை பல இசை நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் இடம்பெற்றிருந்தாலும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை போற்றி பாடும் பாடல் குறித்த இந்த நிகழ்வில்தான் இடம்பெறவுள்ளது.

உலக தமிழர்

இந்த செய்தி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும்,
பிரமாண்டமான imax திரையில் தலைவர் பிபாகரன் படமும் உலக புகழ் பெற்ற மேடையில் அவர் புகழ் பாடும் காட்சியையும் கண்டுகொள்ளக் கூடிய வாய்ப்பு பிரித்தானியாவில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version