Home இலங்கை கல்வி நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9Aசித்தி பெற்று சாதனை

நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9Aசித்தி பெற்று சாதனை

0

நயினாதீவு கடலில் உயிரிழந்த ஒருவரின் மகன் சாதாரண தரப்பரீட்சையில் 9A சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளார்.

நேற்றுமுன் தினம் சாதாரணப் பரீட்சையில் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில்,
நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின்
மகன் கஜவர்சன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று, மண்ணிற்கு பெறுமை சேர்த்துள்ளார்.

9 பாடங்களிலும் A சித்தி

இவரது தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயினாதீவு மகா வித்தியாலயத்தில்
கடமை முடிந்து படகில் வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்தவேளையில், படகு கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் அவர் கடலில் முழ்கி உயிரிழிந்துள்ளார்.

இப்படியொரு நிலையில், மகன் கஜவர்சன் சிறந்த பெறுபேற்றினை பெற்று தனது தந்தை –
தாய்க்கும், பாடசாலைக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

Source: https://tamilwin.com/article/gajavarsan-nainadhivu-scores-9a-in-orl-exam-1782040953

NO COMMENTS

Exit mobile version