Home இலங்கை சமூகம் இலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள பிரித்தானிய நாட்டவரின் செயல்

இலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள பிரித்தானிய நாட்டவரின் செயல்

0

கரேத் தொம்சன் (Gareth Thompson, 58) என்ற பிரித்தானிய நாட்டவர் “எங்கிலாந்தயே
புத்ததாச தேரர்’ என்ற பெயரில்,
வெலிவத்தை விஜேயானந்த பிரிவென விகாரையில், துறவறம் பூண்டுள்ளார்.

இங்கிலாந்தில் ஆசிரியராக இருந்த இவர், சுனாமி அனர்த்தத்தின்போது விஜேயானந்த
விகாரையின் விகாராதிபதி தவளம சித்தத் தேரருடன் இணைந்து பல நிவாரணப் பணிகளை
முன்னெடுத்துள்ளார். 

துறவறம்

இந்த நிலையிலேயே அவர் துறவறம் பூண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதே வெலிவத்தை விஜேயானந்த விகாரையில், 1880ஆம் ஆண்டு பௌத்த மறுமலர்ச்சிக்கு
வித்திட்ட அமெரிக்கரான கேணல் ஹென்றி ஸ்டீல் ஓல்காட் பௌத்தத்தைத் தழுவி,
இலங்கையின் முதல் பௌத்த தர்மப் பாடசாலையான விஜேயானந்த தம்மப் பாடசாலையை
நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் குறித்த சம்பவமானது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version