Home இலங்கை சமூகம் கொழும்பு புறநகர் பகுதியில் விஷ வாயு கசிந்ததில் இருவர் பலி

கொழும்பு புறநகர் பகுதியில் விஷ வாயு கசிந்ததில் இருவர் பலி

0

கொழும்பு (Colombo) – மாலபே பகுதியில் வீடொன்றில் விஷ வாயு கசிவினால் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மாலபே ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (13.08.2024) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 65 மற்றும் 43 வயதான இரண்டு பேரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவாசப் பிரச்சினைகள்

உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

  

இரசாயன வகைகளை கலந்த போது வாயு கசிந்து, இதனால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

என்ன வகையான விஷ வாயு என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை.

வீட்டில் விஷ வாயு பரவியிருப்பதனால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Source: https://tamilwin.com/article/gas-leak-killed-two-1723569517

NO COMMENTS

Exit mobile version