யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் நேற்றையதினம் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த
இராஜேஸ்கண்ணா சஞ்சிகா என்ற 17 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 20ஆம் திகதி தவறான முடிவெடுத்து அதிக மாத்திரைகளை
உட்கொண்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், அவரது பெற்றோர் அவரை யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை
பலனின்றி நேற்று மாலை (21) உயிரிழந்துள்ளார்.
மேலும், சடலம் மீதான மரண விசாரணைகளை
திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
