Home இலங்கை கல்வி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவியின் இலட்சியம்

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவியின் இலட்சியம்

0

தந்தையைப் போல் வைத்திய துறையில் மருத்துவ விஞ்ஞானியாக வருவதே எனது இலட்சியம்
என புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் தேசிய ரீதியில் இரண்டாம்
இடம்பெற்ற  மாணவி தெரிவித்துள்ளார்.

தனது சாதனை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது பெயர் அரோனிக்கா ரேச்சல் கிசான். நான் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில்
கல்வி கற்கின்றேன்.

நான் புலமைப் பரிசில் பரீட்சையில் 189 புள்ளிகளைப் பெற்று
மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும்
பெற்றுள்ளேன்.

நன்றி தெரிவிப்பு

இதற்கு உறுதுணையாக இருந்த கடவுளுக்கு இந்த தருணத்தில் நன்றி கூறுகின்றேன்.
இரண்டாவதாக என்னை சிறப்பாக வழிநடத்தி என்னை உற்சாகப்படுத்தி எனக்காக தம்மையே
அர்ப்பணித்த எனது பெற்றோர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றேன்.

அடுத்து எனது அதிபர், ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர், எனக்கு கற்பித்த
ஆசிரியர்கள், வகுப்பாசிரியர் ஆகியோருக்கும் நன்றிகள்.

என்னோடு பரீட்சைக்கு
தோற்றிய மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நான் எனது தந்தையைப் போல் வைத்திய துறையில் மருத்துவ விஞ்ஞானியாக வர வேண்டும்
என்பதே எனது இலட்சியம் ஆகும் எனத் தெரிவித்தார்.

Source: https://tamilwin.com/article/goal-become-a-medical-scientist-vavuniya-student-1757147869

NO COMMENTS

Exit mobile version