Home இலங்கை பொருளாதாரம் டொலர்களில் எகிறும் தங்கத்தின் விலை: இலங்கையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றம்

டொலர்களில் எகிறும் தங்கத்தின் விலை: இலங்கையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றம்

0

உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 4100 டொலர்களைத் தாண்டியிருந்தது. 

இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த நிலைமை பதிவாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி நேற்று காலை, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4116 டொலராக காணப்பட்டுள்ளது. 

அதிகரிப்பு

அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 56% வரை அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சூழலில் நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி தங்க விலையில் அதிகரிப்பு பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை இன்றைய தினம் கொழும்பு, செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 301,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 326,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நேற்றைய விலை நிலவரத்தை ஒப்பிடும் போது 24 கரட் தங்க பவுண் ஒன்று 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version