Home இலங்கை சமூகம் சூதாட்ட விளையாட்டுக்கள் குறித்து அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

சூதாட்ட விளையாட்டுக்கள் குறித்து அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

0

போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரத்திலும், நாட்டில் இயங்கும்
கப்பல்களிலும் நடத்தப்படும் சூதாட்ட விளையாட்டு கண்காணிக்கப்படும்.

இலங்கையில் விளையாட்டு சூதாட்டத் துறை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க,
சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான முன்மொழிவு
முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

சட்டமா அதிபரின் அனுமதி

கப்பல்களிலும் கொழும்பு துறைமுக நகரத்திலும் நடைபெறும் சூதாட்ட விளையாட்டு
நடவடிக்கைகள் இதில் உள்ளடக்கப்படும்.

அமைச்சரவையிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதலுக்கு இணையாக, இது தொடர்பாக ஒரு வரைவு
யோசனை தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version