Home முக்கியச் செய்திகள் நீண்ட தூர செல்லகூடிய பேருந்துகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நீண்ட தூர செல்லகூடிய பேருந்துகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு முயற்சியைத் தொடங்க அரசாங்கம்
திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புதிய விதிமுறை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆரம்ப கட்டத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) மேற்பார்வையின்
கீழ் , பெஸ்டியன் மாவத்தை மற்றும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம்
ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என மோட்டார்
போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா பேருந்து

நீண்ட தூர சுற்றுலா பேருந்துகளுக்கும் இந்த சோதனை விரிவுபடுத்தப்படும் எனவும் ஆய்வு
இல்லாமல் எந்த சுற்றுலா பேருந்தும் அங்கீகரிக்கப்படாது என்பதையும அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகள்
புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.

தேவையான வழிகாட்டுதல்

இதற்கான தேவையான வழிகாட்டுதல்களை ஒரு சுற்றறிக்கை மூலம் வெளியிட திணைக்களம்
தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் போது, ​​மோட்டார்
போக்குவரத்து திணைக்களம் வாகன பழுதுபார்க்கும் மையங்களையும் ஆய்வு செய்யும் எனவும் தொடர்புடைய சோதனைகளை நடத்தும் மற்றும் தகுதிச் சான்றிதழ்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆய்வு முறையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version