Home இலங்கை சமூகம் சர்ச்சைக்குரிய வடமாகாண வர்த்தமானியை திரும்பப் பெற்ற அரசாங்கம்

சர்ச்சைக்குரிய வடமாகாண வர்த்தமானியை திரும்பப் பெற்ற அரசாங்கம்

0

வட மாகாணத்தில் காணித் தீர்வு தொடர்பாக, 2025, மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட
வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

முன்னதாக, வட மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் காணிகளை கையகப்படுத்துவது
தொடர்பாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள
காணி உரிமை தீர்வுத் திணைக்களைத்தால், வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குற்றச்சாட்டுக்கள்

எனினும் அரசாங்கம், வடக்கில் மக்களின் காணிகளை, அரசாங்கம் கையகப்படுத்த
முயற்சிப்பதாகக் கூறி, குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், வடக்கின் அரசியல்வாதிகளும்,இந்த வர்த்தமானிக்கு தங்கள் எதிர்ப்பை
வெளியிட்டு வந்தனர். 

NO COMMENTS

Exit mobile version