Home இலங்கை கல்வி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் (Grade 5 scholarship exam) பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை

நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை  2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

அந்தவகையில், இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி உள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-result-1756793067

NO COMMENTS

Exit mobile version