Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் – பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் – பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

0

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள் திருத்தங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 6 வரை சமர்ப்பிக்க முடியும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

அதற்கமைய, பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் தகவல்களை வெளியிட்டமையானது அரசியல் நோக்கங்களுக்கு உட்பட்டதா என்று இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) நேற்று (26) கேள்வி எழுப்பியது.

இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்த பேசிய இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் பிரியந்த பெர்னாண்டோ (Priyantha Fernando), புலமைப்பரிசில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விபரம் வெளியிடப்பட மாட்டாது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் ஜெயசுந்தர முன்பு கூறியிருந்த போதிலும், அத்தகைய தகவல்கள் இப்போது பவெளியிடப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version