Home இலங்கை சமூகம் மாம்பழ வியாபாரி தோற்றத்தில் போராட்டத்தில் குதித்த பட்டதாரி

மாம்பழ வியாபாரி தோற்றத்தில் போராட்டத்தில் குதித்த பட்டதாரி

0

திருகோணமலையில் (Trincomalee) அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

திருகோணமலை – கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்றைய தினம் (26.05.2025) குறித்த பட்டதாரி மாம்பழ வியாபாரி போன்று கோர்ட் சூட் அணிந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

மாம்பழ வியாபாரி

கடந்த 2022ம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய சீ எம் மொஹமட் சபீர் என்பவரே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். 

தாம் பட்டம் பெற்று வெளியேறிய காலத்தில் இருந்தே பலவகையான பரீட்சைகளுக்கு தோற்றியதாகவும் இருப்பினும் இந்த அரச கட்டமைப்பானது தம்மை போன்ற பலரை இன்னமும் புறக்கணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்களை இந்த அரசு வழங்கத்தவறுகின்றபோது எதற்காக இந்த நாட்டில் உள்ளவர்கள் வீணாக பட்டம் பெற்று காலத்தை வீணடிக்க வேண்டும் என இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version