Home இலங்கை அரசியல் இலங்கை அரசின் உலங்கு வானூர்தியை ஏற்க மறுத்த ஈரான் ஜனாதிபதி

இலங்கை அரசின் உலங்கு வானூர்தியை ஏற்க மறுத்த ஈரான் ஜனாதிபதி

0

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) இலங்கைக்கு வருகைத் தந்திருந்த போது அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தவிர்த்து மத்தள விமான நிலையத்தின் ஊடாக பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு காரணிகளே பிரதானமாக இருந்தன என்று  பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார்.

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வரும் சமயத்தில் தான் இஸ்ரேல்(Israel) மற்றும் ஈரானுக்கு(Iran) இடையிலான மோதல்  மற்றும் பதற்ற நிலை தீவிரமடைந்திருந்தது.  இந்த நிலையில் அவரது இலங்கை பயணமானது மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.  

இலங்கையின் ஆங்கில ஊடகங்கள் இதனை மேற்கோள்காட்டியே செய்திகளை வெளியிட்டிருந்தன என்றும் கலாநிதி ஆரூஸ் கூறினார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கைக்கு வருகைத் தந்திருந்த சமயத்தில் ஈரான் ஜனாதிபதி மற்றும் அவரது தரப்பினர் இலங்கை அரசின்(Sri lanka Government ) உலங்கு வானூர்தி பயணத்தை ஏற்க மறுத்திருந்ததாகவும் ஆய்வாளர் ஆரூஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

Source: https://tamilwin.com/article/great-danger-to-us-indian-ships-in-sri-lanka-1714403809

NO COMMENTS

Exit mobile version