கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன குளம் பகுதியில் நேற்று (11) மாலை கைக்குண்டு ஒன்று
கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், குறித்த சின்ன குளம்
பகுதியின் கரையோரத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலதிக சட்ட நடவடிக்கை
இதன்போதே குறித்த கைக்குண்டு
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
கைக்குண்டு வைக்கப்பட்டிருந்தமைக்கான காரணம் மற்றும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்கள்
குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
