Home இலங்கை சமூகம் தென்னிலங்கையில் பதிவான மற்றுமொரு துப்பாக்கிச்சூடு: முகாமையாளரொருவர் பலி!

தென்னிலங்கையில் பதிவான மற்றுமொரு துப்பாக்கிச்சூடு: முகாமையாளரொருவர் பலி!

0

தென்னிலங்கையில் இன்றைய தினம் (22.12.2025) மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அதன்படி, அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22.12.2025) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணை

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இரு குற்றக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரும் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாகவும், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காகவும் அம்பலாங்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version